வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்டப் போட்டிகளில் விக்ரோறியாக் கல்லூரியின் 17 வயது ஆண்கள் அணியினர் முதலாமிடத்தைப் பெற்று சம்பியன்களாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். கல்லூரியின் வரலாற்றிலே கரப்பந்தாட்ட அணியொன்று மாகாணமட்டத்திலே முதலிடம் பெற்று தேசியமட்டப் போட்டிகளில் கலந்துகொள்ளத் தெரிவுசெய்யப்பட்டது இதுவே முதற்தடவையாகும்.