2013ஆம் ஆண்டில் எமது கல்லூரியிலிருந்து பல்வேறு வகையான போட்டிகளிலும் மாகாண நிலையிலும் தேசிய நிலையிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியின் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து விருந்துபசாரம் வழங்கினார்கள். ஆசிரியர் கழகத்தின் தலைவர் திரு.கு.ஜேம்ஸ்பஸ்ரியன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சுமார் நூறு மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

கல்லூரியின் உப அதிபர் திரு.செ.சிவகுமாரன், விளையாட்டுத்துறை முதல்வர் திரு.நா.திருக்குமாரன், தமிழ்த்துறை ஆசிரியை செல்வி.பூ.ஜெயமலர் ஆகியோர் மாணவர்களின் திறன்களையும் வெற்றிகளையும் புகழ்ந்து பாராட்டினர். கல்லூரியின் அதிபர் சிறப்புரையாற்றினார். தேசிய நிலையின் ஈட்டி எறிதல் போட்டியில் 2ஆம் இடம் பெற்ற செல்வி.பா.ரஜிதா, தேசிய மட்டத் தமிழ்த் தினப் போட்டிகளில் கட்டுரை ஆக்கத்தில் 2ஆம் இடம்பெற்ற செல்வி.தே.காயத்திரி மற்றும் சமஸ்த லங்கா நடனப் போட்டிகளில் தேசிய நிலை வெற்றி பெற்றோர், பெரு விளையாட்டுக்களான துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், எல்லே போட்டிகளிலம் மெய்வன்மைப் போட்டிகளிலும் மாகாண நிலையில் வெற்றி பெற்றவர்கள், நாட்டிய நாடகம், கணித நாடகப் போட்டி என்பவற்றில் மாகாண வெற்றி பெற்றோர் எனப் பலதரப்பட்ட வெற்றிகளைப் பெற்ற

மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். விளையாட்டுப் பயிற்றுனர்களான எமது பழைய மாணவர்கள் திரு.ந.சிவரூபன், திரு.தி.சுஜிந்தன், திரு.க.கஜேந்திரன் ஆகியோர் மாணவர்களால் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். ஆசிரியர் கழக செயலாளர் திருமதி.யோ.பங்கயச்செல்வி நன்றியுரை கூறினார். மாணவர் சார்பில் செல்விகள் தே.காயத்திரி, ச.பிரியங்கா ஏற்புரை நிகழ்த்தினர்.