எமது சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் ஊட்டப்பாடசாலையான சுழிபுரம் ஐக்கிய சங்க வித்தியாசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு சரியான குடிநீர் வசதி இல்லாத நினையில் வித்தியாசாலையின் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க EDC அமைப்பாளர்கள் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் நிர்வாக அங்கத்தவர் திரு .சி .இரவிசங்கருடன் தொடர்பு கொண்டு இவ்வேலைத்திட்டம் பற்றி விபரித்தார்கள் .இந்த வேலைத்திட்டம் வித்தியாசாலை மாணவர்களின் அத்தியாவசிய தேவையாக இருப்பதினால் திரு .சி .இரவிசங்கர் அவர்கள் இவ்வேலைத்திட்டத்திற்கு 26,105/- ரூபாவை அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார் .இதற்காக ஐக்கிய சங்க வித்தியாசாலையின் அதிபர் திருமதி .M . குணபாலன் ,மற்றும் ஆசிரியர்கள் ,மாணவர்கள் அனைவரும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் .
யுகே பழைய மாணவர் ஒன்றியம் .