எமது கல்லூரிக்கு மத்திய கல்வி அமைச்சினால் இசுரு அபிவிருத்தித் திட்டத்ிதன் கீழ் மாணவர்களுக்கும் மாணவிகளுக்குமென தனித்தனியான மலசலகூடத் தொகுதியும் ஆசிரியர்களுக்கும் விசேட தேவை உள்ளவர்களுக்குமான மலசலகூடத் தொகுதியும் அமைக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் கல்லூரியின் பிரதான வாயில் அகலமாக்கப் பட்டு புதிய நுழைவாயிலும் பாதுகாப்பு அலுவலர் அறையும் நிர்மாணிக்கப்படுகின்றன. அடுத்த மாதம் இரண்டாம் வாரமளவில் இவ் வேலைகள் நிறைவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.