Monday, 31 December 2012

Vasanthan Thanaraj died due to electric shock

Nineteen year old, Mr. V. Tanaraj, from Chulipuram ("Thurkai amman kovilady"), who tried to plug in the electricity wire which had exposed wires, died due to electric shock.
He was alone while trying this. He studied at Victoria College up to O/L and studying at Vaddu Hindu College, as there is no political science teacher at Victoria College (this also we have to look into). They were trying to play volleyball in the night. Before doing the proper wiring he wanted to do the temporary wiring and play the game just last night of the old year. Nobody can be blamed, it's purely fate and a tragedy.

Notice 01

Notice 02

Dinner at our principal's house for Senthil

அவுஸ்ரேலியாவிலிருந்து வருகை தந்த எங்கள் கல்லுர்ரியின் பழைய மாணவன் திரு.க.செந்தில்நாதன் அவர்கள் எமது அதிபரின் இல்லத்துக்கு வருகை தந்தார். அவரும் கல்லூரியின் உபஅதிபர் திரு.செ.சிவகுமாரன் அவர்களும் இராப்போசனம் அருந்தி மகிழ்தனர்.

வடமாகாண கல்விப் பிரிவின் ஆளணி விரைவில் சீராக்கம்

முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட புதிய ஆளணிக் கொள்கைக்கு அமைய வடமாகாண கல்விப்பிரிவின் நிர்வாகச் செயற்பாடுகளில் ஆளணியினர் சீராக்கம் செய்யப்படவுள்ளனர் என்று வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.
இதன்படி ஆளணிவளம் சில இடங்களில் அதிகரிக்கவும், சில இடங்களில் குறைவடையவும் உள்ளது. அதாவது ஆளணியில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
முகாமைத்துவ சேவைத்திணைக்களம் வெளியிட்ட புதிய ஆளணிக் கொள்கைக்கு அமைய அந்த மாற்றம் செயற்படுத்தப்படும். நாளைமறுதினம் முதலாம் திகதி தொடக்கம் அது ஒழுங்கமைக்கப்படும்.
வடமாகாண ஆசிரியர்களின் வருடாந்த இடமாற்றம் தொடர்பாக வன்னிப் பிரதேசத்திலிருந்து இடமாற்றம் பெறவுள்ள ஆசிரியர்களின் விவரங்களும், அவர்களுக்குப் பதிலீடாக இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ள ஆசிரி யர்களின் விவரங்களும் வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைய விசேட இடமாற்ற சபை மூலமாக பரிசீலிக்கப்பட்டு நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த இடமாற்ற சபை மாகாணக் கல்விப் பணிப்பாளரின் தலைமையில் ஏனைய இடமாற்ற சபை உறுப்பினர்களுடன் இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், இலங்கை முஸ்லிம் ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் உள்ளடங்குவர்.
இந்தச் சபையின் நடவடிக்கைகள் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் பூரணப்படுத்தப்பட்டு ஆளுநரின் அங்கீகாரத்துக்குச் சமர்ப்பிக்கப்படும் என்று வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்

தேசிய பாடசாலைகளுக்கு அதிபர் நியமனம்; கல்வி அமைச்சு

நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி நாட்டில் உள்ள 102 தேசிய பாடசாலைகளுக்கு புதிதாக அதிபர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவத்துள்ளது.

அதன்படி புதிதாக அதிபர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி தேசிய பாடசாலைகளுக்கு அதிபர் தரம் ஒன்றில் உள்ளவர்களையே புதிதாக சேர்த்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

இதேவேளை, கடந்த காலங்களில் புதிதாக அதிபர்களை இணைத்துக் கொள்வதில் பல்வேறு காரணங்களினால் தாமதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 

40 ஆண்டுகளுக்கு பின்னர் பரீட்சை சட்டத்தில் மாற்றம்

இலங்கையில் நாற்பது ஆண்டுகளின் பின்னர் பரீட்சை சட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாகத் பரீட்சைத் திணைக்கள வடடாரங்கள் தெரிவித்துள்ளன.
2013ஆம் ஆண்டில் பரீட்சை தொடர்பான சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வருவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி பரீட்சை மோசடிகள் தொடர்பிலான குற்றச் செயல்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தாராதர சாதாரண தரப்பரீட்சையின் விஞ்ஞான பாட வினாத்தாள் பரீட்சைக்கு முன்பே வெளியாகியிருந்தது.

எனவே பரீட்சை வினாத்தாள்களை கசியவிட்ட அரச அச்சக அதிகாரிக்கு வாழ்நாள் பரீட்சைத் தடை விதிக்கப்பட உள்ளது.

மேலும் கடந்த காலங்களில் பரீட்சைகளின் மூலம் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளை ரத்து செய்வது குறித்தும் சட்ட மா அதிபருடன் கலந்தாலோசிக்க உள்ளதாக பரீட்சை ஆணையாளர் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

Increase O/L paper evaluation fees - SLTSA

The Sri Lanka Teacher Services Association (SLTSA) has demanded the Education Ministry to increase the Ordinary Level exam paper evaluation fees.
General Secretary of the Association Mahinda Jayasinghe stated that the current fee is insufficient and that even though the Examinations department has increased the allowance of examination staff, they have failed to increase the evaluation fees.

The SLTSA further mentioned that the fee currently given is barely sufficient to carry out day to day tasks.

Sunday, 30 December 2012

றோகினியும் றாகினியும் வி்ஞ்ஞானப்பிரிவு மாணவி ஒருவரின் கல்வித் தேவைகளுக்காக மாதாந்த உதவித் தொகை வழங்கி வருகின்றார்

எமது கல்லூரியில் க.பொ.த உயர்தர வி்ஞ்ஞானப்பிரிவு மாணவி ஒருவரின் கல்வித் தேவைகளுக்காக கல்லூரியின் பழைய மாணவியான திருமதி.றோகினி மாதாந்த உதவித் தொகை வழங்கி வருகின்றார். அண்மையில் திருமதி.றோகினி குடும்பத்தினரும் திருமதி.றாகினி சிவகுமாரும் கல்லூரிக்கு வருகை தந்து உதவி பெறும் மாணவியுடன் கலந்துரையாடி கற்றலுக்காக அவரை ஊக்குவி்த்தனர். கல்விக்காக தொடர்ந்தும் அம்மாணவிக்கு தமது உதவி கிடைக்கும் என உறுதியளித்தனர். றோகினியும் றாகினியும் பண்ணாகம், வைத்திய கலாநிதி அமரர்.கைலாசப்பிள்ளை அவர்களின் புதல்விகளாவர்.

Saturday, 29 December 2012

க.பொ.த சாதாரணதரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி இன்று ஆரம்பம்

அண்மையில் நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரணதரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள 78 நிலையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

2013ஆம் ஆண்டு புதிய கல்வியாண்டின் அரச பாடசாலைகளுக்கான தவணை அட்டவணை

2013ஆம் ஆண்டு புதிய கல்வியாண்டின் அரச பாடசாலைகளுக்கான தவணை அட்டவணை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி முதலாம் தவணை ஜனவரி மாதம் 2ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 05ஆம் வரையும் இரண்டாம் தவணை ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி வரையும் மூன்றாம் தவணை செப்டெம்பர் மாதம் 02ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 02ஆம் திகதி வரை நடை முறைப்படுத்தப்படுமென கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Friday, 28 December 2012

அதிபர் தரம் 2-1 இல் உள்ளவர்களுக்கு அதிபர் தரம் 1 வழங்க ஏற்பாடு

அதிபர்சேவைத்தரம் 2-1 இல் நீண்டகாலம் கடமையாற்றி அதிபர் சேவைத்தரம் 1 வழங்கப்படாமல் உள்ள அதிபர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதிபர் சேவைத்தரம் 2-1 இல் இருப்போக்கு நீண்டகாலமாக பதவியுயர்வு வழங்கப்படாமல் இருப்பதனை கல்வி அமைச்சிடம் தாம் சுட்டிக்காட்டியதாகவும் அதனை ஏற்றுக்கொண்ட கல்வி அமைச்சு உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் இப்பதவியுயர்வுக்குப் தகுதியானவர்கள் எதிர்வரும் 2013 ஜனவரி 14ஆம்; திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இதேவேளை, மேலதிக விபரங்களை அறிய விரும்புவோர் தன்னுடனோ அல்லது சங்கத்தின் தலைவருடனோ தொடர்புகொள்ளும் படியும் தெரிவித்தார்.

Thursday, 27 December 2012

பெற்றோர்கள், வாழ்விடத்துக்கு அண்மையில் உள்ள பாடசாலைகளில் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கல்வியில் முன்னணி வகித்த யாழ்ப்பாணம் இன்று மது பாவனையில் முதல் இடத்தில் கல்வித் தர நிலை 9 ஆவது இடத்தில்  -  யாழ்.பணிப்பாளர்
யாழ்.மாவட்டம் ஒரு காலத்தில் கல்வியில் முன்னணி வகித்து சாதனை படைத்தது. ஆனால் இன்று மது பாவனையில் முன்னணி வகிக்கின்றது. இன்று கல்வித் தர நிலையில் யாழ். மாவட்டம் 9 ஆவது இடத்தில் உள்ளது. என்று யாழ். கல்வி வலய கல்விப் பணிப்பாளர் வி.செல்வராசா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
 
யாழ்.மாவட்டத்தின் கல்வித்தரம் தேசிய மட்டத்தில் முன்னணி வகித்த நிலைமாறி, 2011 ஆம் ஆண்டு ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீட்டின் அடிப்படையில் 9 ஆவது இடத்துக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இது கவலைக்குரியது. இந்த நிலை தொடர்பாக சமூகத்தில் பொருத்தமான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
இந்த வீழ்ச்சிக்கு ஆசிரியர்களும் கல்வி நிர்வாகிகளும் தான் பொறுப்பு எனக் கூறிக்கொண்டு பெற்றோரும் சமூகமும் அக்கறை கொள்ளாமல் இருக்கக்கூடாது. உண்மை நிலையை உற்றுநோக்க வேண்டும். எமது சமூகத்தின் பழக்கவழக்கத்தில் ஏற்பட்ட திடீர்மாற்றமும், மாணவர் மத்தியில் ஏற்பட்ட பணப்புழக்கமும் கட்டுப்பாடு இன்மையும் தான் இதற்குக் காரணம். இந்த விடயத்தில் பெற்றோர் தமது பங்களிப்பை மறந்து விடக்கூடாது. நிதானத்துடன் உற்றுநோக்கி சீர் செய்யவேண்டும்.
தரம் 5 புலமைப்பரிசில் வரை பிள்ளைகளின் கல்வியில் காட்டும் அக்கறையையும் வழிப்படுத்தலையும் தொடர்ந்து மேற்கொள்ளத் தவறியமை. பிள்ளைகளை வாழ்விடத்துக்கு அண்மையில் உள்ள பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ளாமல் நகரப் பாடசாலையில் மற்றும் தூர இடங்களில் உள்ள பாடசாலைகளில் சேர்த்துக் கொள்வதால் மாணவர் மத்தியில் ஏற்பட்ட திடீர் மாற்றம். கையடக்கத் தொலைபேசிப்பாவனை, பிள்ளைகள் மத்தியில் தேவைக்கு அதிகமான பணப்புழக்கம், ஆடம்பரமான வாழ்க்கை வசதி, பெற்றோரின் தொலைக்காட்சி பாவனை, மோட்டார் சைக்கிள் பாவனை, பொருத்தமில்லாத நண்பர்களின் தொடர்பு நிலை.
இந்த விடயங்களில் காணப்படும் தீமைகளைக் கட்டுப்படுத்துவதில் சீர்செய்வதில் பெற்றோர் தமது பங்களிப்பில் தவறு விடுகின்றனர். பெற்றோர்கள் பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டில் தொடர்ச்சியான அக்கறையும் மேலான கவனமும் செலுத்தும் அதேநேரத்தில், தமது வாழ்விடத்துக்கு அண்மையில் உள்ள பாடசாலைகளில் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கிராமியச் சூழலில் சகல வசதிகளும் கொண்ட பாடசாலைகள் செயற்பட வேண்டும் என்பதற்காகவே இசுறு பாடசாலை மற்றும் ஆயிரம் பாடசாலை அபிவிருத்தித் திட்டம் 5000 ஊட்டப்பாடசாலை வேலைத்திட்டம் என்பன முன்னெடுக்கப்படுகின்றன.
பெற்றோர் தமது பிள்ளைகளை நகரப் பாடசாலைகளை நோக்கி அனுப்பி வைப்பதால் எதிர் கொள்ளும் தீமைகள் அதிகம். இந்த நிலையில் தமது வாழ்விடத்துக்கு அண்மையில் உள்ள பாடசாலைகளில் இணைத்துக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக, யாழ்.கல்வி வலயத்தில் உள்ள மூன்று கோட்டங்களில் நல்லூர், யாழ்ப்பாணம் கல்விக் கோட்டம் இரண்டும் கல்வியில் முன்னணியில் இருக்கும் அதேநேரம் கோப்பாய்க் கல்விக் கோட்டம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. தற்போதைய கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி நிலையிலும் குறைந்த மட்டத்தில் கோப்பாய் கோட்டம் உள்ளது. ஏன் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். கோப்பாய் கல்விக் கோட்டத்தில் உள்ள மாணவர்களில் திறமையுள்ளவர்கள் நல்லூர், யாழ்ப்பாணம் கல்விக் கோட்டப் பாடசாலைகளில் அனுமதிபெற்று கற்கின்றனர். அவர்களின் பெறுபேறு அந்தக் கோட்டங்களுக்கு உரியதாகி விடுகின்றது. இந்த நிலை மாற வேண்டும் கோப்பாய் கோட்டத்தின் கல்வி அடைவுமட்டம் உயரவேண்டும் என்றார்.

Wednesday, 26 December 2012

A/L results out before Jan 30 - Exams Chief

http://www.topssrilanka.com/shared/images/news/2012-50/940917930book12.jpg
The results of the 2012 G.C.E. Advanced Level examination will be released before January 30, 2013, confirmed the Commissioner General of Examinations N.J. Pushpakumara. The 2012 A/L examinations commenced on August 06 while paper marking had been delayed due to a strike launched by university lecturers.
A total of 277,671 candidates sat for the examination at 2,093 centres.

Visit of Australian OSA members‏ and EDC Meeting at Victoria College

இன்று விக்ரோறியாக் கல்லூரிக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து பழைய மாணவர்களான திரு.அ.சதானந்தமனுநீதி அவர்களும் திரு.க.செந்தில்நாதன் அவர்களும் வருகை தந்தார்கள். நேற்றைய தினம் அமெரிக்காவிலிருந்து வருகை தந்த Dr.இராமச்சந்திரன் அவர்களைத் தொடர்ந்து இன்று இவர்கள் இருவரும் கல்லூரியைச் சுற்றிப் பார்வையிட்டு மகிழ்ச்சியடைந்தனர். இவர்களுடன் முன்னாள் பிரதிஅதிபர் திரு.சி.க.இந்திரராஜா(EDC வெளிநாட்டு இணைப்பாளர்) அவர்களும் Dr.கண்ணதாசன் (EDC செயலாளர்) அவர்களும் கலந்து கொண்டு கல்லூரியின் செயற்பாடுகள் குறித்து கருத்துப் பரிமாறிக் கொண்டனர். அத்துடன் எதிர்வரும் 27-12-2012ம் திகதி வலிகாமம் கல்வி வலயம் நடாத்தும் பௌர்ணமி விழாவில் எமது கல்லூரி மாணவர்கள் வழங்கும் கலை நிகழ்ச்சிகளின் ஒத்திகைகளையும் பார்வையிட்டனர்.

See Photos

Tuesday, 25 December 2012

Dr Ramachandiran's Visit

எமது கல்லூரியில் மூத்த பழைய மாணவர்களில் ஒருவரான Dr.S.இராமச்சந்திரன் அவர்கள் நேற்றைய தினம் நீண்ட கால இடைவெளியின் பின் கல்லூரிக்கு வருகை தந்தார். அவரும் அவரது பாரியாரும் கல்லூரி வளாகத்தைச் சுற்றிப் பார்வையிட்டு தமது கல்விச் சாலையின் வளர்ச்சியைக் கண்டு பெருமிதம் அடைந்தார்கள். "தம்பா" என எல்லோராலும்  அழைக்கப்படும் இவர்,  ஒரு புற்று நோயியல் நிபுணராவார். 2013ம் ஆண்டுக்கான துடுப்பாட்டப்போட்டிகளுக்கான பயிற்சிகளுக்கான ஆரம்ப நிகழ்வுகளில் Dr.இராமச்சந்திரன் கலந்து சிறப்பித்தார். இவர் கல்லூரியின் புகழ் மிக்க துடுப்பாட்ட வீரர் என்ற நிலையில் நேற்றைய பயிற்சிகளின் போது வீராங்கனைகளை வாழ்த்தி ஆசிகூறியதுடன் அவர்களோடு இணைந்து துடுப்பாட்டத்திலும் களத் தடுப்பிலும் ஈடுபட்டார். அத்தோடு அவர்களுக்குத் தேவையான ஒரு தொகைப் பந்துகளையும் அன்பளிப்பாக வழங்கினார். சிறந்த விளையாட்டு வீரரான இவர், துடுப்பெடுத்து ஆடியும் பந்துவீசியும் தனது பழைய நினைவுகளை மீட்டுக்கொண்டார்.  கல்லூரியின் அபிவிருத்தி தொடர்பாக அதிபருடன் மிகவும் அக்கறையாகக் கலந்துரையாடினார்.

See Photos

Wishing you all a Merry Christmas

See Photos

Monday, 24 December 2012

EDC Completing another project-Naavalar Children's Park Opening

 சுழிபுரம் நாவலர் முன்பள்ளிக்கான சிறுவர் விளையாட்டுத்திடல் இன்று உத்தியோகபூர்வமாக சிறுவர்களின் பாவனைக்குக்  கையளிக்கப்பட்டது. சுழிபுரம் கல்வியபிவிருத்திக்கழகம் (E D C ) இம்முன்பள்ளியின் நீர்விநியோகத்திட்டத்திற்கு விக்டோரியா கல்லூரியின் யூ கே பழைய  மாணவர ஒன்றியத்தினூடாக உதவியிருந்தது எல்லோரும் அறிந்ததே.  முன்பள்ளி நிருவாகத்தின் இன்னுமோர் வேண்டுகோளான சிறுவர் விளையாட்டுத்திடல் மிகவும் குறுகிய காலத்துள் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது . இதற்கான நிதியுதவியினை கனடாவைச்சேர்ந்த திருவாளர்களான தயானந்தா, சித்திரானந்தா, ஜெயகாந்தன், தாரகன், சுதர்சன் ஆகியோருடன் அவுஸ்திரேலியாவைச்சேர்ந்த திரு செந்தில்நாதனும் வழங்கியுள்ளனர்.
நாவலர் சனசமூக நிலைய தலைவர் திரு நிரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் E D C தலைவரும் விக்டோரியா கல்லூரியின் அதிபருமான  திரு சிறிகாந்தன் 
பொருளாளர் திரு ரவீந்திரன், செயலாளர் Dr கண்ணதாசன், அமெரிக்காவிலிருந்து வருகை தந்திருந்த திரு திருமதி Dr ராமச்சந்திரன், அவுஸ்திரேலியாவிலிருந்து வருகைதந்திருந்த திரு மனுநீதி மற்றும் செந்தில்நாதன் EDC வெளிநாட்டு இணைப்பாளரும் ஓய்வுபெற்ற உப அதிபரும் ஆகிய திரு இந்திரராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.  
விருந்தினர்களின் உரையைத்தொடர்ந்து Dr ராமச்சந்திரன் நாடாவினை வெட்டி விளையாட்டுத்திடலைத்திறந்து வைத்தார்.
சிறுவர்கள் குதூகலத்துடன் விளையாடியது மனநிறைவைத்தந்தது. இம்முயற்சியில் ஈடுபட்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

See Photos

கல்வி பொதுத் தராதர பரீட்சை

கல்வி பொதுத் தராதர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் 30ஆம் திகதி ஆரம்பம்

கல்வி பொதுத் தராதர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி 2013 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதிவரை விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறவுள்ளது.

அதற்கமைய நாடளாவிய ரீதியில் 78 பாடசாலைகள் விடைத்தாள் திருத்தும் நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ளது.

அதன்படி குறித்த 78 பாடசாலைகளும் 2013 ஆம் ஆண்டின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனவரி 10ஆம் திகதி திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறாத பாடசாலைகள் ஜனவரி 2 ஆம் திகதி திறக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

எனினும் தற்போது விஞ்ஞான பாட வினாத்தாள் ஏற்கனவே வெளியாகியமை குறித்தும் அதற்காக ஆசிரியர் ஒருவர் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஓ/எல் விஞ்ஞான பரீட்சையில் 19 கேள்விகளுக்கு முழுப் புள்ளி

க.பொ.த. சாதாரண தர விஞ்ஞான பாட வினாத்தாள், பரீட்சை நடைபெறுவதற்கு முன்னதாகவே வெளியாகியது உண்மை என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, பரீட்சைக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் 19 வினாக்களுக்கும், பரீட்சையில் பங்குபற்றிய மாணவர்கள் அனைவருக்கும் புள்ளிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விஞ்ஞான பாட வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டதா என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் வினாத்தாள் வெளியாகியுள்ளமை உறுதியாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் மூவர் கைது
இதேவேளை, சாதாரண தர விஞ்ஞான பாட வினாத்தாள், பரீட்சைக்கு முன்னதாக வெளியிட்ட சம்பவம் தொடர்பில் பரீட்சை திணைக்களத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் நேற்று கடுவல நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் இதற்கு முன்னர் கைதுசெய்யப்பட்டிருந்த தனியார் கல்வி நிலைய ஆசிரியர் உள்ளிட்ட இருவர் மற்றும் இம் மூவரையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓ/எல் பரீட்சை எழுதாத மாணவர்களுக்கு விசேட பரீட்சை நாள் அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் பரீட்சைக்கு தோற்றமுடியாமல் போன மாணவர்களுக்கு விசேட பரீட்சை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நடந்து முடிந்த க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் சீரற்ற காலநிலை காரணமாக பல மாணவர்கள் கணிதம் மற்றும் அழகியற்கலை பாட பரீட்சையினை எழுத முடியாது போனது.

இவ்வாறு எழுதத்தவறிய மாணவர்களுக்காக விசேட பரீட்சை நாட்கள் பரீட்சைகள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் இந்த பரீட்சைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் பல பாகங்களிலும் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலர் இப்பரீட்சைகளிற்கு முகங் கொடுக்கவில்லை. மாணவர்களது நலனைக் கருத்திற் கொண்டு விசேட பரீட்சை ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Sunday, 23 December 2012

தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கு இடமாற்றம்

தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கு இடமாற்றம்; கடந்த வாரத்தில் இருந்து அமுலில்; கல்வி அமைச்சு
நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய பாடசாலைகளின் ஆசிரியர் இடமாற்றம் கடந்த வாரத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்தும் ஒரு தேசிய பாடசாலையில் கடமையாற்றி வருகின்ற மூவாயிரத்து 100 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.

அத்துடன் 10 வருடங்களிற்கு அதிக காலமாக ஒரே தேசிய பாடசாலையில் கடமையாற்றி வருகின்ற ஒன்பதாயிரத்து 300 ஆசிரியர்களும் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.

இருப்பினும் நாடளாவிய ரீதியில் 343 தேசிய பாடசாலைகள் உள்ளன. இந்த பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர்கள் பல்வேறு காரணங்களிற்காக இதுவரையில் இடமாற்றம் செய்யப்படாமல இருந்தனர் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மாகாணமட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் ஐந்து வருடங்களிற்கு ஒரு முறை இடமாற்றம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
News from Uthayan  23/12/2012

Short of teachers, This is happening in north and central province.

http://www.topssrilanka.com/shared/images/news/2012-50/986689895teacher118.jpg

North Central Provincial Education Minister Peshala Jayaratne stated that 227 schools in that region do not have a teacher for English.

The minister further stated that the number of vacancies in the North Central Province amount to 3386 while adding that there is a surplus of teachers in the urban areas and a shortfall in rural parts.

The minister made these statements at a press conference on 11/12/2012.

வைகுண்ட ஏகாதசி தோன்றியது இப்படித்தான்!

லீhர, அயந என்னும் இரு சொற்கள் கூடி நாராயண என்னும் ஒரு சொல்லாயிற்று நாரம் என்பது உயிர்த்தொகுதி, அயனம் - இடம் உயிரினங்களுக்கு இடமானவன் நாராயணன். உயிரினங்களைக் காப்பதற்கு இறைவன் சில தலங்களைத் தேர்ந்தெடுப்பது போல சில காலங்களையும் தேர்ந்தெடுத்திருக்கிறான்.
அவை புண்ணிய காலங்கள் எனப்படும். தலங்களில் திருவரங்கம் போல புண்ணிய காலங்களில் ஏகாதசி உயர்ந்தது: ஏகாதசிக்கு ஹரிதனம் (நாராயணனுடைய நாள்) என்னும் பெயர் உண்டு. ஏகாதசி நோன்பினைக் கைக்கொண்டு ஒழுகுவதே வைணவம். எட்டு வயதுக்கு மேல் எண்பது வயது வரை மானிடர் யாவராயினும் இரு பட்சங்களிலும் ஏகாதசியன்று உபவாசம் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். முரன் என்ற அசுரனால் துன்புறுத்தப்பட்ட இந்திராதியர், சிவனை அணுகி அபயம் கேட்டனர். நாரணனைச் சரணடையுமாறு வழிகாட்டினார் சிவன். சரணடைந்த தேவர்களுக்காக முன்னின்று யுத்தம் புரிந்தான் நாரணனன். முரன் கிளர்ந்தெழுந்தான், அமரர் சிதறினர், இறைவனும் ஆற்றலிற் குறையுடையவன் போல் பயந்தோடி வதரி மலையிலுள்ள சிம்ஹவதி என்னும் குகையில் போய் களைப்புதீர கண்ணுறங்கினான். முரன் பின் தொடர்ந்து வாள் கொண்டு வதம் செய்ய முற்பட்டான். அவ்வமயம் இறைவன் திருமேனியின்று கன்னி ஒருத்தி வெளிப்பட்டுப் போரிட முரனுக்கு முன்னின்றாள். முரன் முடிந்தான். கன்னி வடிவத்தில் தன்னிடமிருந்து வெளிப்பிட்ட சக்தி அவ் இறைவனுக்கே வியப்பளிக்கிறது. என் பகவானை முடித்தது யார்? என்று பரமன் கேட்கிறான். அக்கன்னி உலகை அச்சுறுத்தும் அசுரனைத் தானே கொன்றதாக கூறினாள். பேருதவி புரிந்த அக்கன்னியிடம் நன்றி கூற வரம் வேண்டுமாறு கேட்டான் மாயன். ஏகாதசி என்று பெயர் கொண்ட அவ்வனிதை நின் அன்புக்கு உரியவளாக நான் ஆக வேண்டும். திதிகளுள் முக்கியமானவளாக நான் விளங்க வேண்டும். நான் பிறந்த இந்நாளில் உபவாசம் இருப்போர் சித்திகள் அனைத்தும் பெற வேண்டும் என்னும் வரங்களை வேண்டிக்கொண்டாள். இப்படிதான் ஏகாதசி தோன்றியது. மார்கழி மாதம் கிருஷ்ண பட்சத்தில் ஆகையால் மார்கழி மாதத்து கிருஷ்ணபட்ச ஏகாதசி உத்பத்தி ஏகாதசி என்று வழங்கப்பட்டது. மார்கழி மாதத்து சுக்லபட்ச ஏகாதசி மோட்ச ஏகாதசி என்று வழங்கப்பெறும். இதுவே விமோசனம் தரவல்லது. இந்த ஏகாதசி விரதத்தைக் கைக்கொண்ட அளவிலே ஒருவன் இன்னல்களிலிருந்து விடுதலை பெறுவதோடு தன் தொடர்புடையவர்களையும் இன்னல்களிலிருந்து விடுவிக்கும் ஆற்றல் பெறுகிறான் என்கிறது சாஸ்திரம். ஏகாதசி விரதம் யார் இருக்க வேண்டும்? ஏகாதசி விரதம் எல்லாரும் இருக்க வேண்டிய விரதம் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது. எட்டு முதல் எண்பது வயதுக்குள் உள்ளவர்களே மேற்கொண்டுகொள்ள வேண்டும். இதனை அஷ்ட வர்ஷாதிக: மர்த்ய அபூர்ணாசீதி வத்ஸர! ஏகாதச்யாம் உபவஸேத் பக்ஷயோ: உபயோ: அபி!! என்னும் ஸ்லோகம் குறிப்பிடுகிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------------

முக்கோடி ஏகாதசி

மார்கழி வளர்பிறை ஏகாதசி திதி, வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. திதிகளில் ஏகாதசி 11 வது நாள். ஏகாதசிக்கு முதல்திதியான தசமியன்று விரதம் தொடங்கி விட வேண்டும். தசமியன்று ஒரு வேளை உணவும், மறுநாளான ஏகாதசியன்று பட்டினியும் இருக்க வேண்டும்.
துளசி நீர் குடிக்கலாம். உடல் நிலை முடியாதவர்கள் எளிய உணவு சாப்பிடலாம். ஏகாதசியன்று இரவில் விழித்து பெருமாளின் திருநாமங்களை சொல்ல வேண்டும். விழிக்கிறேன் என்ற பெயரில் சினிமா, டிவி பார்க்கக் கூடாது. மறு நாள், துவாதசியன்று காலையில் நீராடி திருமண் இட்டு, துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். அதன் பிறகு சாப்பிட வேண்டும். இதனை பாரணை என்பர். பாரணையில் 21 விதமான காய்கறிகள் இடம் பெற்றிருக்கும். இயலாதவர்கள் அவரவர் வசதிக்கேற்ப சமைத்துக் கொள்ளலாம். அகத்திக்கீரை, நெல்லிக்காய் அவசியம் சேர்க்க வேண்டும். பாரணைக்குப் பின் உறங்கக் கூடாது. ஏகாதசியன்று துளசி இலை பறிக்கக் கூடாது. முதல் நாள் பறித்த இலைகளை பூஜைக்கும், தீர்த்தத்திற்கும் பயன்படுத்தலாம். முப்பத்து முக்கோடி தேவர்களும் விரதம் இருப்பதால் மார்கழி ஏகாதசியை வைகுண்ட முக்கோடி ஏகாதசி என்பர். கோயில்களில் பெருமாள் இந் நாளில் பரமபதவாசல் வழியாக எழுந்தருள்வார். இதன் வழியாக கோயிலுக்குள் சென்று பெருமாளைத் தரிசிப்பது சிறப்பு. ஏகாதசிக்கு பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது புனிதமானது. இவ் விரதத்தால் செல்வ வளமும், புண்ணிய பலனும் கிடைக்கும்

மரண அறிவித்தல்-திரு கந்தையா அப்பாப்பிள்ளை








(கொழும்பு பம்பலபிட்டி, கொள்ளுப்பிட்டி பிரபல வர்த்தகர் ராம்ஜிலொட்ச் முதலாளி)
மலர்வு : 27 மார்ச் 1946 — உதிர்வு : 22 டிசெம்பர் 2012

சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா அப்பாப்பிள்ளை அவர்கள் 22-12-2012 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற கதிரேசு மகேஸ்வரி(சின்ன கொழும்பு ஆச்சி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவராணி அவர்களின் அன்புக் கணவரும்,
தயாபரி சச்சிதானந்தசிவம்(சிவதயா தமிழ் அச்சக உரிமையாளர்-சுவிஸ்), தயாபரன்(இலண்டன்), சிறீதரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சச்சிதானந்தசிவம்(சிவதயா தமிழ் அச்சக உரிமையாளர்-சுவிஸ்), ஜெயலட்சுமி(லண்டன்), சாந்தசொரூபி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிவாசினி, கேயூரன், தருணீசன் ஆகியோரின் அன்புச் செல்ல அம்மப்பாவும்,
நிர்மிதா, நீவிதா, நிசாங்கன், சந்தோஸ் ஆகியோரின் அன்பு செல்ல அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 23-12-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியிலிருந்து 1.00 மணிவரை 55/1 Peterson Lane, Wellawatta என்ற முகவரியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் ஈமைக்கிரியைகள் நடைப்பெற்று பின்னர் 3.00 மணியளவில் கல்கிசையில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள்







தொடர்புகளுக்கு
அப்பாப்பிள்ளை தேவராணி(மனைவி) — இலங்கை
தொலைபேசி:+94112365025
கச்சிதானந்தசிவம் தயாபரி(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41417553192
அப்பாப்பிள்ளை தயாபரன்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி:+442089048504
அப்பாப்பிள்ளை சிறீதரன்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி:+492318644378
கதிரவேலு சிவபிரகாசம்(மைத்துனர்) — ஜெர்மனி
தொலைபேசி:+492961989622

Sri Lanka's G.C.E. (Ordinary Level) students to get full marks for leaked questions

Sun, Dec 23, 2012, 11:50 am SL Time, ColomboPage News Desk, Sri Lanka.
Dec 23, Colombo: Sri Lanka Minister of Education Bandula Gunawardena has said that the candidates of the G.C.E. (Ordinary Level) examination will have full marks for the 19 questions that were leaked.

The Minister said that the examination would not be held again for the leaked science paper. He said this was the procedure followed at similar instances previously.

However, a science teacher who is an activist of the Ceylon Teachers' Union said that the results would be deformed and finally it would affect the future of the students.

Criminal Investigation Department yesterday remanded a tuition teacher who was arrested for leaking 19 questions with multiple choice answers of the science paper 1.

Sri Lanka Ministry of Education to implement national teacher transfer policy

 Sun, Dec 23, 2012, 09:34 pm SL Time, ColomboPage News Desk, Sri Lanka.
Dec 23, Colombo: Sri Lanka Minister of Education Bandula Gunawardena said today at a press conference held in Colombo that his Ministry will implement the National Teacher Transfer Policy from the beginning of next year.

The policy aims at establishing a balance in teacher distribution for national and provincial schools in the country.

Accordingly, 3,100 teachers who have served in the same national school for over 20 years and 9,300 teachers who have served in a national school for over 10 years will be transferred to other schools from the beginning of next year.

Proper teacher transfer policy was not effective for the 343 national schools and most of the national schools are overstaffed, but the teachers are not transferred to nearby under-staffed schools that are under the provincial councils, the Minister pointed out.

Under the new policy, the teachers will be inter-transferred between national and provincial council schools.

According to Sri Lanka's power devolution arrangements, the central government runs 330 national schools while the provincial councils run the other 9,000 some schools in the respective provinces.
<! =Chandrica=><! --- End News Item --->

Saturday, 22 December 2012

Colours Night

வட மாகாண பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டத்தில் விளையாட்டு நிகழ்வுகளில் பெற்ற வெற்றிகளை கௌரவிக்கும் வர்ண இரவுகள் (Colours Night) விழா நடைபெற்ற போது விக்ரோறியாக் கல்லூரியின் பெண்கள் துடுப்பாட்ட அணியினர் சிறப்பாக கௌரவிக்கப்பட்டனர். வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத் துறை அமைச்சினால் ரூபா.60000 இவ்வெற்றியைப் பெற்றமைக்காக கல்லூரிக்கு வழங்கப்பட்டது. அதிபர், பயிற்றுநர், பொறுபாசிரியர், அணிவீராங்கனைகள் கௌரவம் பெறும் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

See Photos

Friday, 14 December 2012

Christmas Party


JVC OSA(UK) would like you to join us on Saturday 15thDecember 2012 for a Christmas Party at
Weldone Park Middle School
Wyventhoe Ave
South Harrow
HA2 8LS
Party starts from 6PM.
Come and enjoy the Dinner and Dance and reminisce with old friends.
Admission is free.

Thursday, 13 December 2012

Meeting and Dinner at Principal's House

யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்களான திரு .உலகநாதன் ,திரு .ரவிசங்கர் ஆகியோர் எமது விக்ரோறியாக்கல்லூரியின் அதிபரால் அவரது இல்லத்திற்கு அழைத்து கௌரவிக்கப்பட்டு சுவையான விருந்துபசாரம் அதிபரின்  குடும்பதவரா ல் வழங்கப்பட்ட்து. இந்த நிகழ்வு கல்லூரியின் அதிபர் பழைய மாணவர்கள் மீது வைத்திருக்கும் நட்புறவினை எடுத்துக்காட்டுகின்றது . மேலும் இந்த விருதுபசாரத்தில் EDC உறுபினர்களும் கலந்து கொண்டார்கள். இந்த விருதுபசாரத்தில் பாடசாலையின் கல்வி வளர்ச்சி, அதிபர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், மாணவர் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், பாடசாலை நிர்வாகத்தில் தலையிடும் வெளிச்சக்திகள், போன்ற கருத்துகள் கலந்து ஆலோசிக்கப்பட்டன.  இந்த விருதுபசாரத்தின்  இறுதியில் இனிவரும் காலங்களில் அதிபரால் முன்வைக்கப்பட்ட  கல்வியை மேலும் முன் எடுக்கும் பல திடமான திட்டங்களை UK-OSA  உறுப்பினர்களும், EDC  உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.
யுகே பழைய மாணவர் ஒன்றியம் .

See Photos

Tuesday, 11 December 2012

சுகயீனம் காரணமாக வர முடியாமல் இருந்த முன்னாள் அதிபர்களை அவர்களின் இல்லத்திற்கு சென்று கௌரவித்தல்.

யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் மீள் புனரமைக்கப்பட்ட "Ridge Way Hall"திறப்பு விழாவில் கௌரவிக்கப்பட இருந்த கல்லூரியின் முன்னாள் அதிபர்களான திரு .K.K.நடராஜா அவர்களும் ,திரு .S.பத்மநாதன் அவர்களும் சுகயீனம் காரணமாக வர முடியாமல் இருந்த காரணத்தால் கல்லூரி அதிபர் வ .ஸ்ரீகாந்தன் ,DR.கண்ணதாசன் ,யுகே பழைய மாணவர் ஒன்றிய உறுப்பினர்களான திரு .உலகநாதன் .திரு .ரவிசங்கர் ஆகியோர் முன்னாள் அதிபர்களின் இல்லத்திற்கு சென்று அவர்களைக் கௌரவித்தார்கள் .

See Photos

Sunday, 9 December 2012

நாடகப் பயிற்சிப்பட்டறை நிகழ்வு

சுழிபுரம் விக்ரோரியாக்கல்லூரி மாணவர்களுக்கான அரசாங்கத்திறன் விருத்தி நாடகப் பயிற்சிப்பட்டறை நிகழ்வு சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது .
புத்தாக்க அரசாங்க இயக்கத்தினால் நடாத்தப்பட்ட இப்பயிற்சிப் பட்டறை நிகழ்வின் வளவாளர்கள் புத்தாக்க அரசாங்க இயக்கப் பணியாளரும் ,யாழ்ப்பாண மத்திய கல்லூரி நாடகத்துறை ஆசிரியருமான எஸ் .ரி .குமரன் அவர்கள் புத்தாக்க அரசாங்க இயக்கத்தின் நிர்வாகப்பணிப்பாளரும் ,மானிப்பாய் இந்துக்கல்லூரி நாடகத்துறை ஆசிரியருமான எஸ் .ரி .அருள்குமரன் ஆற்றுகையாளர் எஸ் .லோன்சன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்ச்சிப் பட்டறையை திறம்பட வழிநடாத்தினார்கள் .
இப்பயிற்சிப் பட்டறையில் நாடகத்தயாரிப்பு படிமுறை ,அரங்கத்திறன்விருத்தி ஆளுமை வளர்ச்சிசார் பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது .இப்பயிர்ச்சிப் பட்டறையில் தரம் 6 தொடக்கம் உயர்தரம் வரையிலான 50 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் .பயிற்சிப் பட்டறை நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் இப்பயிர்ச்சிப் பட்டறை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போது மிகவும் பயனுள்ள முறையில் அமைந்ததுடன் புதிய அனுபவங்களையும் அரங்கியல்சார் நுட்பங்களையும் அறிந்துகொள்ள முடிந்ததாகத் தெரிவித்தார்கள் .

Saturday, 8 December 2012

Year End Day

விக்ரோறியாக் கல்லூரியின் 2012ஆம் ஆண்டு நிறைவு நாளன்று முதன்மை நிலை பெற்ற மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கை வழங்கல், உயர் புள்ளி பெற்றவர்களுக்கான ஊக்குவிப்புப் பரிசுகள் வழங்கல் நிகழ்வுகள் கல்லூரியின் “றிஜ்வே” மண்டபத்தில் நடைபெற்ற போது, ஐக்கிய இராச்சியத்தின் பழைய மாணவர் சங்கக் காப்பாளர் திரு.த.உலகநாதன் அவர்கள் வருகை தந்து அவற்றை மாணவர்களுக்கு வழங்கி கௌரவித்தார்.

See Photos (Set 1)

See Photos (Set 2)

Friday, 7 December 2012

மெய்கண்டான் மகாவித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா

06.12.2012 இன்று மெய்கண்டான் மகாவித்தியாலயத்தில் அதிபர் சு.கணேசதாசன் தலைமையில் வித்தியாசாலைப்பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது .இப்பரிசளிப்பு விழாவிற்கு இருதயச் சத்திரசிகிச்சை நிபுணர் DR.ஞானமூர்த்தி -காந்திஜி அவர்களும் ,திருமதி .கிருசாந்தி -காந்திஜி அவர்களும் பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர் .சிறப்பு விருந்தினராக முன்னாள் அதிபர் திரு .கா .சந்திரசேகரன் ,சங்கானை கோட்டக் கல்விப்பணிப்பாளர் செல்வி .அ.ச .மரியாம்பிள்ளை அவர்களும் கலந்து கொண்டனர் .
இப்பரிசளிப்பு விழா வழக்கம்பரை அம்மன் கோவிலில் இருந்து மாணவர்கள் ,மக்கள் சகிதம் ஊர்வலமாக வந்து மங்கள விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமானது .செல்வி .சி .செவ்வந்தி அவர்கள் வரவேற்பு உரை நிகழ்த்தினார் .மருத்துவ பௌதீகவியலாளர் அ .ராசலிங்கம் நிறுவனர் நினைவுப் பேருரை நடாத்தினார் .சிவஸ்ரீ சுந்தரராசக் குருக்கள் அருள் ஆசியுரை வழங்கினார் .மற்றும் சிறந்த கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
ஒயிலாட்டம் ,சிறுவர் நாடகம் ,நாட்டுக்கூத்துடன் மாணவர்களுக்கான பரிசுகள் DR. கிருசாந்தி -காந்திஜி அவர்களால் வழங்கப்பட்டது .நன்றியுரை திரு .வை .குகதாசன் அவர்கள் கூறினார் .
இப்பரிசளிப்பு விழாவிற்கு விக்ரோறியாக் கல்லூரியின் அதிபர் வ. ஸ்ரீகாந்தன் மற்றும் ஆசிரியர்கள் ,EDC அமைப்பாளர்கள் விக்ரோறியாக் கல்லூரியின் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும் .இவ்விழாவின் போது யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மெய்கண்டான் மகாவித்தியாலயத்திற்கு இரண்டு கணனிகள் அன்பளிப்புச் செய்வதற்கு முன்வந்துள்ளனர் .இந்நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது .
யுகே பழைய மாணவர் ஒன்றியம் .

See Photos

Wednesday, 5 December 2012

"Ridge Way Hall" திறப்புவிழா

விக்ரோறியாக் கல்லூரியின் 100 வருடத்திற்கு மேலான "Ridge Way Hall" யுகே பழைய மாணவர் ஒன்றியத்தினால் மீள் புனரமைப்புச் செய்யப்பட்டு மீண்டும் மாணவர்களின் பாவனைக்கு இன்று 05.12.2012 திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது .இந்தக் கோலாகலமான திறப்பு விழா அதிபர் திரு வ. ஸ்ரீகாந்தன் தலைமையில் நடைபெற்றது . 
இத்திறப்பு விழாவிற்கு யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் ஆரம்ப கால உறுப்பினரும் போசகருமான திரு த. .உலகநாதன் அவர்களும் ,எமது ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினரும் கல்லூரி வேலைத்திட்டங்களின் பொறுப்பாளருமாகிய திரு .சி. இரவிசங்கர் அவர்களும் ,மற்றும் முன்னைநாள் அதிபர்கள் திரு .கா. சந்திரபாலன் ,திருமதி .அ வேலுப்பிள்ளை ,மற்றும் கல்லூரி சமூக அங்கத்தவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள் . 
இவ்விழாவில் கலந்து கொண்ட எல்லாப் பிரதிநிதிகளும் கௌரவமாக அழைத்து வரப்பபட்டு ஒன்றியத்தினால் புனரமைக்கப்பட்ட "Ridge Way Hall" திரு .உலகநாதன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது . அதனைத் தொடர்ந்து யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் பொருளாளர் திருமதி .சாம்பசிவம் -தேன்மொழி அவர்களால்  அன்பளிப்பாக வழங்கப்பட்ட மின் வழங்கியினைக் கல்லூரிப் பழைய மாணவர் ஒன்றியத்தின் தலைவர் திரு வி..உமாபதி அவர்கள் தொடக்கி வைத்துள்ளார் .அதன் பின் சிற்றுண்டிச் சாலை கட்டுவதற்காக விழாவில் கௌரவிக்கப்பட்ட உறுப்பினர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது . 
விழாவின் ஆரம்பத்தில் தலைவர் ஸ்ரீகாந்தன் அவர்கள் சிறந்த தலைமை உரை வழங்கியுள்ளார். .அத்துடன் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர் திரு .உலகநாதன் சிறப்புரையாற்றினார்.அதனைத் தொடர்ந்து முன்னாள் அதிபர்களும் தற்போதைய அதிபரும் பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.   திரு .உலகநாதன் மற்றும் திரு .இரவிசங்கர் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டார்கள். 
தொடர்ந்து கல்லூரி மாணவ முதல்வியும் திரு து ரவீந்திரன் அவர்களும் நன்றியுரை வழங்கினர்.  .நல்லதோர் நடன நிகழ்வைத்தொடர்ந்து சிறந்த மதியபோசனம் வழங்கப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவேறியது .
 நன்றி ,
யுகே பழைய மாணவர் ஒன்றியம் .

See Photos

See Videos

More photos and videos coming soon, please visit this site again.

Monday, 3 December 2012

Admission Card

இவ்வருடம் (2012) க.பொ .த. சாதாரண தர பரீட்ச்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான அனுமதியட்டை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.. இந்நிகழ்வில் சுழிபுரம் பழைய மாணவர் சங்கத் லைவர் திரு .வி .உமாபதி அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களை ஆசீர்வதித்ததுடன் அனுமதி அட்டைகளை வழங்கி சிறப்பித்தார்.
See Photos

Sunday, 2 December 2012

யுகே பழைய மாணவர் ஒன்றியத்தினால் புனரமைக்கப்பட்ட "RIDGE WAY HALL" இன் திறப்புவிழா .

எதிர்வரும் 05.12.2012 அன்று பல இலட்சம் ரூபா செலவில் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தினால் மீள் புனரமைப்புச் செய்யப்பட்ட "RIDGE WAY HALL" மீண்டும் மாணவர்களின் பாவனைக்கு திறந்து விடப்படவுள்ளது .இத்திறப்பு விழாவிற்கு யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர் திரு .உலகநாதன் அவர்கள் இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக கலந்து கொள்ளஉள்ளார் ,அத்துடன் எமது கல்லூரியின் முன்னாள் அதிபர்கள் ஆகிய MR.K.K.Nadaraja, MRS.A.Veluppilai, MR.S.Pathmanathan, MR.K.Santhirabalan ,   இவ்விழாவில் கௌரவிக்கப்படவுள்ளார்கள் என்பது சிறப்பு அம்சமாகும் .

1905 ஆம் ஆண்டு நிறுவக முகாமையாளர் திரு .C. முதலியார் -செல்லப்பா அவர்களால் கட்டப்பட்ட இந்த "RIDGE WAY HALL" பல இலட்சம் மாணவர்களின் வளர்ச்சிக்கு ஒரு படிக்கல்லாக இருந்தது .இந்த மண்டபம் நூறு வருடங்களுக்கு மேற்பட்டதால் அதன் தரை மாணவர்களின் பாவனைக்குப் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது .கல்லூரி அதிபர் திரு .ஸ்ரீகாந்தன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இத்தரையை புனரமைப்பதற்கு யுகே பழைய மாணவர் ஒன்றியம் முன்வந்து செலவினை ஏற்றுக்கொண்டது .

இம்மண்டப வேலைத்திட்டத்தை குறுகிய காலத்தில் செய்து முடிக்க அயராது உழைத்த E.D.C அமைப்பினரும் ,மற்றும் தொல்புரம்"Marble Company"யினரும் சேர்ந்து சிறந்த முறையில் இந்த மண்டபத்தை அமைத்துத் தந்துள்ளனர் .மண்டபத்தின் தரை ,மண்டபத்தின் விறாந்தை ,மேடை மற்றும் கதவுகள் உட்பட மண்டபத்தின் அனைத்துச் சுவர்களுக்கும் வெள்ளை வர்ணம் அடிக்கப்பட்டுள்ளது .

இவ்வனைத்து வேலைத்திட்டத்திற்கும் முழு ஆதரவு தந்த கல்லூரி அதிபர் ,மற்றும் S.D.S அமைப்பினர் ,தொல்புரம்" Marble Company"யினர் இவ் வேலைத்திட்டத்திற்கு அயராது உழைத்த E.D.C அமைப்பினர் யாவருக்கும் யுகே பழைய மாணவர் ஒன்றியம் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது .

See Invitation

Saturday, 1 December 2012

மரண அறிவித்தல்-திரு அம்பலவாணர்

எமது கல்லூரியில் 1960ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டுவரை 38 வருடங்கள் ஆய்வுகூட உதவியாளராக நிறைந்தபணி செய்த திரு.கே.அம்பலவாணர் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்.
கல்லூரியின் உயர்தர, இடைநிலை ஆய்வுகூடங்களை சிறப்பாக பராமரித்தும் பாதுகாத்தும் வந்ததுடன் தேவைப்படுகின்றபோதெல்லாம் விஞ்ஞான செய்முறைகளை மேற்கொள்ள துறைசார் ஆசிரியர்களுக்கு மிகுந்த உதவியாகவும் ஆதரவாகவும் செயற்பட்ட இவர் சுமார் பத்து அதிபர்களுக்குக் கீழ் சேவைசெய்து கல்லூரிச் சமூகத்தின் அபிமானத்தைப் பெற்றவர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதுடன் குடும்பத்தவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கின்றோம்.

விக்ரோறியாக்கல்லூரிச் சமூகம்

Earlier News

சுளிபுரம் விக்டோரியாக் கல்லூரியில் நீண்டகாலமாக (38 வருடங்கள்) ஆய்வுகூட உதவியாளராகக் கடமையாற்றிய ' வாணர்" என அழைக்கப்படும் திரு அம்பலவாணர் இறைபதமடைந்துவிட்டார்.
கடமையுணர்வும் நேரந்தவறாமையும் ஆங்கிலப்புலமையும் கொண்ட இவர் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மாணவர்களினதும் அன்பைப்பெற்றவர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய யூ கே பழைய மாணவர் சங்கம் இறைவனைப் பிரார்த்திக்கிறது.

Friday, 30 November 2012

நாவலர் முன்பள்ளி புதிய விளையாட்டுத்திடல்

சுழிபுரம் பறாளாய் நாவலர் சனசமூக நிலையத்தினால் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் நாவலர் முன்பள்ளியில் இருபதிற்கும் மேற்பட்ட சிறுவர்கள் தமது ஆரம்பக்கல்வியை கற்று வருகின்றார்கள் .இந்த முன்பள்ளியில் கல்வி கற்று வரும் மாணவர்களுக்கு ஒரு விளையாட்டுத்திடல் அமைக்க வேண்டும் என்பது நீண்ட கால கனவாக இருந்தது .இந்த மாணவச்செல்வங்களின் கனவை நனவாக்குவதற்காக E.D.C அமைப்பாளர்களின் அயராத உழைப்பிற்கு விக்ரோறியாக்கல்லூரியின் கனடா பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் ,அவுஷ்திரேலிய பழைய மாணவர்கள் சிலரும் சேர்ந்து ஒரு இலட்சத்து நாற்பத்து ஐயாயிரத்து அறுநூறு (1,45600.00)ரூபா பெறுமதியான பணத்தை முன்பள்ளி மாணவர்களின் விளையாட்டுத்திடல் அமைப்பதற்காக நன்கொடையாக கொடுத்துள்ளார்கள். இதற்கான வேலைத்திட்டத்தை E.D.C அமைப்பாளர்கள் வெகு விரைவில் ஆரம்பிக்க உள்ளார்கள் .
கனடா மற்றும் அவுஷ்த்திரேலிய பழைய மாணவர் சங்கத்தின் இந்த சேவையைப் பாராட்டி சுழிபுரம் வாழ் மக்கள் தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் .இவர்களைப்போல் வெளிநாடுகளில் வசித்து வரும் அனைத்து பறாளாய் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் அனைவரும் தம்மால் இயன்ற நன்கொடையை கொடுத்து இந்த மாணவச் செல்வங்களின் உயர்விற்கு உரம் கொடுங்கள் .

தகவல் .
யுகே பழைய மாணவர் ஒன்றியம் .

Contributor's Detail

Name Canadian Doller Rupees
Thayanantha Sivasubramaniyam 200.00 26,000.00
Chithiranantha Sivasubramaniyam 100.00 13,000.00
Jeyakanthan Swaminathan - Canada 150.00 19,500.00
Tharahan Muthucumaraswamy - Canada 200.00 26,000.00
Sudharshan Muthucumaraswamy - Canada 355.00 46,100.00
Senthilnathan Kanthasamy - Australia 15,000.00
Total Donated 145,600.00

Thursday, 29 November 2012

திருக்கார்த்திகை விளக்கீடு‏

விக்ரோறியாக் கல்லூரியின் இந்து மாணவர் மன்றத்தினர் திருக்கார்த்திகை விளக்கீட்டினை சிறப்பாகக் கொண்டாடினார்கள். கல்லூரியில் வீற்றிருக்கும் சிவகாமி சமேத நடேச பெருமானுக்கும் விசேட பூசைகள் நடைபெற்ற பின்னர், கல்லூரி வளாகம் முழுவதும் கார்த்திகைத் தீபம் ஏற்றப்பட்டது.

Tuesday, 27 November 2012

EDC Scholarship

சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள்,  எமது விக்ரோறியாக் கல்லூரிக்கும் ஊட்டப் பாடசாலையான ஐக்கிய சங்க வித்தியாசாலையில் கல்விகற்கும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வரும் மாணவர்களில் தலா 10 பேர்களைத் தெரிவு செய்து அந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தேவையான ஊக்குவிப்பு நிதியினை கொடுக்க முன்வந்துள்ளார்கள் .

இந்த ஊக்குவிப்பு நிதிக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களை E.D.C அமைப்பினர்கள் சில விதிமுறைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள் .உதாரணமாக ,அடிப்படை வசதி குறைந்த ,மற்றும் குடும்ப வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த கல்வியில் சிறந்த பெறுபேறுகளை பெற்று வரும் மாணவராக இருத்தல் வேண்டும் .

இந்த நிதியை தெரிவு செய்யப்படும் மாணவர்கள் தங்கள் கல்விவளர்ச்சிக்குத் தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கும் மற்றும் கல்வி சார்ந்த தேவைகளுக்கு மட்டுமே செலவு செய்தல் வேண்டும் .இந்த ஊக்குவிப்பு நிதி முதல் கட்டமாக அடுத்த மாதம் முதல் மாதாந்த அடிப்படையில் கொடுக்க E.d.C அமைப்பாளர்கள் ஒழுங்கமைக்கப் பட்டுள்ளார்கள் .

விக்ரோறியாக் கல்லூரியின் யுகே பழைய மாணவர் ஒன்றியம் அடுத்த வருடத்தில் இருந்து மாணவர்களின் கல்விவளர்ச்சிக்கு தேவையான வேலைத்திட்டங்களை செய்வதற்கு திடடமிட்டுளார்கள்.அதன் ஆரம்பக் கட்டமாக மாணவர் கல்வி ஊக்குவிப்பு நிதியினை கொடுக்க முன்வந்துள்ளார்கள் .இந்த சிறந்த வேலைத்திட்டத்தினால் பல மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவோம் .

இந்த ஊக்குவிப்பு நிதியத்தில் நீங்களும் சேர விரும்பினால் மாதம் குறைந்தது 5 pounds கொடுத்து உங்களால் ஒரு மாணவனுக்கு எதிர்காலத்தில் பிரகாசமான வெளிச்சத்தை உருவாக்கிக் கொடுங்கள் ."தானங்களில் கல்வியும் ஓர் சிறந்த தானமே "

யுகே பழைய மாணவர் ஒன்றியம் .
 

Monday, 26 November 2012

மரண அறிவித்தல்-கலாபூசணம் நடேசன் சிவசண்முக மூர்த்தி

 
 
 
சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், தொல்புரம் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட நடேசன் சிவசண் முகமூர்த்தி (ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் வலிகாமம் வலயம்) நேற்று (25.11.2012) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நடேசன் வள்ளியம்மை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னப்பிள்ளை தம்பதியரின் மருமகனும், திருமதி லோகாம்பிகையின் அன்புக் கணவரும், சிவகௌரி (பரிசோதகர் தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை), சிவரஞ்ஜனி (ஆசிரியர் யா/பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி) சிவசங்கரன் (ஜனசக்தி காப்புறுதி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான குருபரன், பரமேஸ்வரன், அன்னபூரணம் மற்றும் தெய்வநாயகி, மால்மருக மூர்த்தி (ஆஸ்திரேலியா) ஆகியோரின் சகோதரனும், காலஞ்சென்ற கமலாம்பிகை, ஞானாம்பிகை, ராதாகிருஸ்ணன் மற்றும் பால கிருஸ்ணன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று (25.11.2012) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் திருவடி நிலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்

_____________________________________________________________________________________________

விக்ரோறியாக்கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் திரு நடேசன் சிவசண்முகமூர்த்தி அவர்கள் இன்று (25/11/2012) அதிகாலை 1.00 மணியளவில் இறைபதமடைந்தார். சமயபாட ஆசிரியரான இவர், சமய பிரசங்கங்கள் செய்வதில் வல்லவர். மேலும், குரல்வளம் மிக்க இவர், நாட்டார் பாடல்கள் பாடுவதில் தன்னிகர் இல்லாதவர். பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சமயமும் பாடசாலையின் புகழும் பரவ உதவியவர். அன்னாரின் உற்றார், உறவினர், நண்பர்களின் துயரில் பங்குகொள்வதொடு , அன்னாரின் ஆத்மா சாந்தியடைய, விக்ரோறியாக்கல்லூரியின் யூ.கே பழைய மாணவர் ஒன்றியத்தினராகிய நாம் இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.